இலங்கை கூட்டுக் கொலை செய்யும் அரசு, இந்தியா மெல்லக் கொல்லும் அரசு : அருந்ததிராய்.
பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. மூன்றாயிரம் பேர் வரைக் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழத்தைச் சார்ந்த அமித் பாதுரி. பேராசிரியர் சாய்பாபா, உள்ளிட்டோ கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கான புறச்சூழலை ஊடகங்களின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நடந்த கூட்டத்தின் பதிவுகள் இங்கே பகிரப்படுகிறது..முதலில் துவக்க உரையாற்றிய தோழர் விடுதலை ராஜேந்திரன்,” ஒரு மாபெரும் மனிதப் பேரழிவை சந்தித்த தேசீய இனத்தைச் சார்ந்தவர்கள் நாம் என்கிற வகையில் மக்கள் விடுதலைக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்க வேண்டும். ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகள் தண்டகாரண்யாவில் போராடும் பழங்குடி மக்கள் போராட்டங்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.பொதுவாக போராடுகிறவர்களைப் பார்த்து காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். இவர்கள் தேச விரோதிகள் என்று யார் தேச விரோதி. உள்நாட்டு மக்களின் சொந்தக் குடிகளின் வளங்களை எடுத்து பன்னாட்டு நிறுவங்களுக்கு தாரை வார்க்கு சிதம்பரமும், மன்மோகனும்தான் தேச விரோதிகளே தவிற மண்ணைக் காக்க போராடுகிற மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளுமல்ல. அவர்கள் தேச பக்தர்கள். என்ன விதமான ஒடுக்குமுறைகளைச் சந்தித்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க வேண்டும்”" என்றார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன்.
தியாகு: ”நம்முடைய சொந்த சகோதர்களான ஈழ மக்கள் சந்தித்த அழிவையே இப்போது பழங்குடி மக்களும் சந்திக்கிறார்கள். இந்த மக்களை எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்றும் குடிமக்கள் என்றும் சொல்கிற அரசுகளோ மக்களைக் கொன்றொழிக்கிறது. இவர்களைத்தான் பாரத் தாய் என்று சொன்னார்கள். உண்மையில் பாரத்தாய் அல்ல பேய். பிள்ளைக்குப் பசித்தால் தாய் அழுவாள். பிள்ளைக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் பதறிப் போவாள். ஆனால் பாரத்தாயோ அழுத பிள்ளைக்கு விஷம் கொடுத்தாள். உயிர்காப்பாற்று என்று கதறிய குழந்தையை கொடூரமாகக் கொன்றாள். இது ஈழத்தில் நடந்தது. காஷ்மீரில் நடக்கிறது. தண்டகாரண்யாவில் நடக்கிறது. நாம் அழுகிற குழந்தைகளின் பக்கம் நிற்கிறோம். இந்தப் பேயின் கரங்களை எங்கள் காஷ்மீர் குழந்தைகள் வெட்டி வீசுவார்கள். போர் வெறி பிடித்த இந்தியப் பேயை எமது தண்டகாரண்யா போராளிகள் துண்டாடுவார்கள். எங்கள் மக்களை அழித்த இந்தியப் பேயை எமது ஈழத்துக் குழந்தைகள் கழுத்தை அறுத்துக் கொல்வார்கள்”" என்று பேசினார்.
பேராசிரியர் கீலானி : “சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது அப்போதெல்லாம் இவர்கள் வளர்ச்சி பற்றி பேசவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து வளங்களை கொள்ளையடித்து அவர்களிடம் கொடுத்து விட்டு வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். பெண்களை பாலியல் வன்முறை செய்வதும், கடத்துவதும், கொலை செய்வதும் கொள்ளையடிப்பதும்தான் வளர்ச்சியா? இந்த நாட்டின் பெரும்பலான மக்கள் ஏழைகள் அவர்கள் ஊட்ட்ச்சத்து மிக்க உணவு இல்லாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் டில்லியில் தீர்ப்பாயம் ஒன்றுக்கு பழங்குடி மக்களை அழைத்து வந்தார்கள். அவர்களிடம் இந்திய உயர்பீடத்தினர் கேட்டார்கள். “மாவோயிஸ்டுகள் ஏன் பள்ளிகளையும் மருத்துவனமைகளையும் தகர்க்கிறார்கள். என்று?” அதற்கு பழங்குடி மக்கள் சொன்னார்கள். அது பள்ளியோ மருத்துவமனையோ அல்ல பள்ளி, மருத்துவமனையை ஆக்ரமித்து அவர்கள் இராணுவ முகாமாக்கி விடுகிறார்கள். ஆகவே மாவோயிஸ்டுகள் அல்ல நாங்கள்தான் அதைத் தகர்த்தோம் என்று. ஆக மக்களை ஆயுதங்களை நோக்கி நகர்த்துவதுதான் இந்திய அரசின் வேலையாக இருக்கிறது. அண்மையில் அருந்ததிராய் சொன்னது போல அங்கே தொண்ணூறு சதவீத பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல ஆனால் 99% மாவோயிஸ்டுகளும் பழங்குடிகளே என்றார். ஆமாம் அப்படித்தான் நிலைமை இருக்கிறது. போராடும் எல்லா இடங்களுக்கும் இது பொறுந்தும் இல்லையா? காஷ்மீர் சுயாட்சிக்காக நீண்ட காலம் அஹிம்சை வழியில் அமைதி வழியில் போராடினார்கள். பின்னர் வந்த இளைஞர்கள் ஆயுத மேந்தி வீட்டை விட்டு வெளியேறி ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்.
நீண்ட காலம் நீதி மறுக்கப்பட்ட நிலையில் காஷ்மீரிகளின் சுயாட்சிக் கோரிக்கை வன்முறை வடிவம் பெற்றது. ஒருவன் எப்போது ஆயுதமேந்துகிறானோ அப்போதே அவன் தன் உயிர் பறிக்கப்படுவது பற்றி கவலைப்படுவதில்லை. அதுதான் காஷ்மீரிலும், தண்டகாரண்யாவிலும் நடக்கிறது. அமைதி என்பது நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோரது விருப்பமும் உரிமை கேட்டுப் போராடும் மக்களுக்கு நியாயமான தீர்வுகளைத் தேடுவதன் மூலமே பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என்றார் பேராசியர் கீலானி.
அருந்ததிராய் : ” பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிரான இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் பன்னாட்டு நிறுவனங்களான வேதாந்தா, எஸ்ஸார் நிறுவனங்களுக்கு மாவோயிஸ்டுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றால் ஆந்திராவில் நக்சல்பாரிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
பங்குச் சந்தையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.நிறுவனங்களின் கைகளில் நிலங்கள் சென்றது மக்கள் சாவை நோக்கித் துரத்தப்பட்டனர். சுமார் 550 கிராமங்களில் இருந்து மக்கள் துரத்தப்பட்டனர் அந்த நிலங்களை இந்திய அரசு அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டது. இதுதான் அம்மக்களின் அமைதியைக் குலைத்தது. தங்களின் பூர்வீக நிலங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
அவர்களை ஆதரிக்கிற என்னையும் மாவோயிஸ்டுகள் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. நான் சொன்னதை திரித்து வெளியிடுகிறார்கள். எங்களை நீங்கள் ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் அவர்களின் பக்கம் என்று அமெரிக்காவின் குரலை இங்கே சொல்கிறார்கள். நான்
இப்போதும் சொல்கிறேன் மக்கள் கொலையை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் வில்லும் அம்பும் வைத்திருக்கிற மக்களை கனரக ஆயுதங்களைக் கொண்டுக் கொல்கிறீர்களே நான் எப்படி உங்களின் பக்கம் நிற்க முடியும்? நான் கைது செய்யப்படுவதைப் பற்றி அஞ்ச வில்லை. நியாத்துக்காக போராடுகிறேன் நான். 2 லிருந்து மூன்று கோடி மக்கள் வரை காடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வார்கள். நான் கூட முன்னர் பேசும் போது சொன்னேன் நான் உங்களுடன் இருக்கிறேன் உங்களைக் கொல்வதை இனி அனுமதிக்க மாட்டேன் என்றேன். ஆனால் என்ன நடந்தது அன்றாடம் கொல்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடிந்தது. அவர்கள் கொன்று கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸோ, பிஜேபியோ, அதிமுகவோ, திமுகவோ உங்களை ஆள்வதாக நீங்கள் நினைக்காதீர்கள். டாடாவும், எஸ்ஸாரும், வேதாந்தாவும்தான் உங்களை ஆள்கிறார்கள் இந்திய பெரு நிறுவனங்கள்தான் இனி ஈழ மக்களையும் ஆட்சி செய்வார்கள்.
இவர்களின் வர்த்தக நலனுக்காக ஈழ மக்கள் கொல்லப்பட்டார்கள். வெளிப்படையான போர் ஒன்றைத் தொடுத்து பெருந்தொகையான மக்களைக் கொன்றொழித்தது இலங்கை அரசு. அந்த இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது. கூட்டம் கூட்டமாக மக்களை வெகு வேகமாகக் கூட்டுக் கொலை செய்தது இலங்கை அரசு. ஆனால் இந்தியா அப்படிச் செய்யாது மக்களைக் கொல்ல இந்தியா தந்திரத்தைக் கையாள்கிறது. இலங்கை அரசு நடத்திய படுகொலையில் இருந்து படிப்பினையைப் பெற்று அதை வேறு வடிவத்தில் தண்டகாரண்யாவில் செயல்படுத்துகிறது இந்திய அரசு. இலங்கையில் நடந்த போரை தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக இல்லாததால் இவர்கள் அதைச் செய்யவில்லை.
இவர்கள் மக்களையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு வந்தது. தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்தி மக்கள் நிலங்களை கொள்ளையடிக்கத் துவங்கிய பின் மாவோயிட் தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. இதற்கு இவர்கள்தான் பொறுப்பு” என்று பேசினார்.”
NANDRI ; INIORU .COM
Monday, May 30, 2011
Friday, May 20, 2011
SMS
"1992ஆவது வருஷம் தான் எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகப்படுத்தப்பட்டுச்சாம். நீல்டேவொர்த் இவர் தான் அவரோட ப்ரண்டுக்கு முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பிருக்கார். "மேரி கிறிஸ்துமஸ்" அப்டிங்கிறதுதான் உலகத்திலேயே முதல் எஸ்.எம்.எஸ். இது 1992ஆவது வருஷம் டிசம்பர் மாசம் 3 ஆம் தேதி அனுப்பப்பட்டுச்சாம்"
The first SMS message was sent over the Vodafone GSM network in the United Kingdom on 3 December 1992, from Neil Papworth of Sema Groupusing a personal computer to Richard Jarvis of Vodafone using an Orbitel 901 handset. The text of the message was "Merry Christmas "
The first SMS message was sent over the Vodafone GSM network in the United Kingdom on 3 December 1992, from Neil Papworth of Sema Groupusing a personal computer to Richard Jarvis of Vodafone using an Orbitel 901 handset. The text of the message was "Merry Christmas "
Wednesday, May 11, 2011
Final part Operation Trust _ KGB - James Bond
The last part of the my post regarding KGB- James Bond in the operation trust. Everybody knows who is James bond. An British intelligence spy who is successful in carrying out activities alone behind the enemy lines. But Ian Fleming who was the creator of the character James bond said that he developed the character from the inspirations of the real character of british intelligence officer name “Sidney Reilly”. Successful activities carried out by the Sidney Reily (Real Jmaes bond) helped Britain a lot especially in world war 1 . He was very skillful in penetrating into the enemy defense lines and collect data about enemy . One example was he was once penetrated into one of the Kaiser , william meeting with top army officials in disguise as German officer.
But Sidney Reily was actually a Russian. Because he dislike Russia which I don’t what was the exact reason came to Britain and settle in Britain itself. He joined British intelligence department “MI5” , and carried out a lot of successful activities .During that time Sidney able to get intelligence information from Russia . During that period Russia was considered as Iron Curtain. It was very difficult to get any information from Russia. One of the reason for Loss of Germany to Russia was attributed to this. they couldn’t get actual information about the strength of army , population statistics etc . But Sidney reily was very clever in doing these things . Even one time Britian has idea of replacing Lenin with Sideney Reily . That much of contacts Sidney had . When Russia came to know about this dreadful spy in their country, Sidney cleverly left the country and came to Britain.
So what is the link between Sidney reily and operation trust . When Sidney reily was constantly thinking and planning about removal of lenin govt in Russia , it was like sweet about the arrival of MUCR in Europe . But KGB member in disguise as MUCR members establish a contact with Sidney reilly .It was Well Placed Trap which Sidney fallen into it. They planned together the activities .It won’t not be enough with planning. In order to execute the plan MUCR member lured Sidney to go to Russia and co ordinate the activities and said It would be a morale boost for the members and able to overthrew the government effectively.
Based upon the trust from MUCR member., he went to Russia . he was about meet an KGB agent in Russian border , where he was caught and then he was tortured and killed by the KGB in Russia bringing a sad end to the Brilliant career of one great spy in the world that time .
Operation trust not only killed Real James bond but also many people like him who against the Russian regime and supported the unrest in Russia. The operation trust was one of the successful operations by Russia to keep their rule.
Through this I completed the post of Operation trust – KGB – James bond .ur comments are welcome
But Sidney Reily was actually a Russian. Because he dislike Russia which I don’t what was the exact reason came to Britain and settle in Britain itself. He joined British intelligence department “MI5” , and carried out a lot of successful activities .During that time Sidney able to get intelligence information from Russia . During that period Russia was considered as Iron Curtain. It was very difficult to get any information from Russia. One of the reason for Loss of Germany to Russia was attributed to this. they couldn’t get actual information about the strength of army , population statistics etc . But Sidney reily was very clever in doing these things . Even one time Britian has idea of replacing Lenin with Sideney Reily . That much of contacts Sidney had . When Russia came to know about this dreadful spy in their country, Sidney cleverly left the country and came to Britain.
So what is the link between Sidney reily and operation trust . When Sidney reily was constantly thinking and planning about removal of lenin govt in Russia , it was like sweet about the arrival of MUCR in Europe . But KGB member in disguise as MUCR members establish a contact with Sidney reilly .It was Well Placed Trap which Sidney fallen into it. They planned together the activities .It won’t not be enough with planning. In order to execute the plan MUCR member lured Sidney to go to Russia and co ordinate the activities and said It would be a morale boost for the members and able to overthrew the government effectively.
Based upon the trust from MUCR member., he went to Russia . he was about meet an KGB agent in Russian border , where he was caught and then he was tortured and killed by the KGB in Russia bringing a sad end to the Brilliant career of one great spy in the world that time .
Operation trust not only killed Real James bond but also many people like him who against the Russian regime and supported the unrest in Russia. The operation trust was one of the successful operations by Russia to keep their rule.
Through this I completed the post of Operation trust – KGB – James bond .ur comments are welcome
Tuesday, May 10, 2011
கணினி ஆய்வில் தமிழ் அத்தியாயம் - 1
கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியது தமிழ் என்பதை நாம் ஆணித்தரமாக சொல்ல நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற கல்வெட்டுக்களே ஆதாரம். காலம் நாகரீகத்தோடு கைக் கோர்த்துக் கொண்டு பயணித்ததால் ஓலைச் சுவடி, தாள்(பேப்பர்) என தனது இருப்பை புதிது போல் நீடித்து வந்த தமிழ் இன்று அதிகம் வசிப்பது கணினியில். நமக்கு முன் முன்னோர்கள் தொகுத்தளித்த தமிழை நாம் எதிர்வரும் புதிய தலைமுறைகளுக்கு தொகுத்தளிக்க வேண்டும் அல்லவா? கண்டிப்பாக வேண்டும். இது தமிழ் படிக்க, எழுத தெரிந்த ஒவ்வொரு சாமான்யனின் தார்மீக கடமையாகும்.
நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக சேர்ந்த பிறகுதான், அது எவ்வளவு கடினமான செயல் என்று புரிந்தது. தமிழில் கணினி சம்பந்தப்பட்ட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி (பி.ஹெச்.டீ) செய்பவர்கள் பெரும்பாலும் பொறியியலில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். அதே போல் மைய அரசின் உதவியுடன் செய்யப்படும் பல ஆராய்ச்சித் திட்டங்கள் தமிழை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுவது வியப்புக்குரிய சங்கதி. அண்ணா பல்கலைக்கழக கணினி பிரிவில் தமிழை மையமாகக் கொண்டு பல ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழை கணினி ஆய்வின் கோணத்தில் பார்க்கும்போது என்னென்ன சிக்கல்கள் உள்ளன, என்னென்ன ஆய்வுகள் தமிழில் செய்யப்பட்டுள்ளன போன்ற விபரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவதாக தமிழில் ஆய்வு செய்வதில் இருக்கும் சிக்கல் தமிழில் இருக்கும் பல்வேறு எழுத்துருக்கள் (பான்ட்டுகள்) ஆகும். தமிழை பிராசஸ் செய்ய ஒரு கருவி வடிவமைக்கும் போது அனைத்து எழுத்துருக்களையும் அரவணைத்து வடிவமைப்பது கடினம். ஒரு தேடு பொறி(சர்ச் எஞ்சின்) உருவாக்கும் போது வலைத்தள ஆவணங்கள் ஒவ்வொன்றும் வித விதமான எழுத்துருவில் இருப்பதால் அனைத்து ஆவணங்களையும் பிராசஸ் செய்வது கடினம். முதலில் டேப் என்கோடிங் முறையில் பல ஆவணங்கள் வலைத்தளத்தில் இருந்தன. டேப் அண்ணா, டேப் மதுரம் போன்ற எழுத்துருக்களை நீங்கள் உபயோகித்திருப்பீர்கள். இப்பொழுது யூனிகோடு என்கோடிங் முறை பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. 'லதா' என்கிற எழுத்துரு யூனிகோடு எழுத்துரு ஆகும். இதன் காரணமாக முதலில் டேப் எழுத்துக்களை பிராசஸ் செய்த மொழிக்கருவிகள் யாவையும் யூனிகோடு எழுத்துருக்களை பிராசஸ் செய்ய பிரத்யேக கன்வெர்டர்கள் மூலம் மாற்ற நேர்ந்தது. அனைத்து வலைத்தளங்களும் யூனிகோடு முறையை பின்பற்றினால் இனி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு வசதியாக இருக்கும் என்பது எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.
இப்படி பல எழுத்துரு சிரமங்கள் இருப்பினும் தமிழ் மொழியில் பிற இந்திய மொழிகளை காட்டிலும் அதிக வலைத்தள ஆவணங்கள் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். தமிழிலில் இருக்கும் விக்கிபீடியா ஆவணங்கள் மட்டுமே ஒரு தமிழ் தேடு பொறியை வடிவமைக்க ஓரளவிற்கு போதுமானது. அவ்வளவு விக்கிபீடியா ஆவணங்கள் தமிழில் உள்ளன. உலகெங்கும் உள்ள தமிழர்களின் தமிழ் ஆர்வமே இதன் முக்கிய காரணம் என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை. தமிழ் கணினி ஆய்வில் உள்ள பிற சிக்கல்களை அடுத்த கட்டுரையில் பாப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
-சுபலலிதா.
My sister
நான் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக சேர்ந்த பிறகுதான், அது எவ்வளவு கடினமான செயல் என்று புரிந்தது. தமிழில் கணினி சம்பந்தப்பட்ட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி (பி.ஹெச்.டீ) செய்பவர்கள் பெரும்பாலும் பொறியியலில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளாகவே இருக்கிறார்கள். அதே போல் மைய அரசின் உதவியுடன் செய்யப்படும் பல ஆராய்ச்சித் திட்டங்கள் தமிழை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்படுவது வியப்புக்குரிய சங்கதி. அண்ணா பல்கலைக்கழக கணினி பிரிவில் தமிழை மையமாகக் கொண்டு பல ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழை கணினி ஆய்வின் கோணத்தில் பார்க்கும்போது என்னென்ன சிக்கல்கள் உள்ளன, என்னென்ன ஆய்வுகள் தமிழில் செய்யப்பட்டுள்ளன போன்ற விபரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவதாக தமிழில் ஆய்வு செய்வதில் இருக்கும் சிக்கல் தமிழில் இருக்கும் பல்வேறு எழுத்துருக்கள் (பான்ட்டுகள்) ஆகும். தமிழை பிராசஸ் செய்ய ஒரு கருவி வடிவமைக்கும் போது அனைத்து எழுத்துருக்களையும் அரவணைத்து வடிவமைப்பது கடினம். ஒரு தேடு பொறி(சர்ச் எஞ்சின்) உருவாக்கும் போது வலைத்தள ஆவணங்கள் ஒவ்வொன்றும் வித விதமான எழுத்துருவில் இருப்பதால் அனைத்து ஆவணங்களையும் பிராசஸ் செய்வது கடினம். முதலில் டேப் என்கோடிங் முறையில் பல ஆவணங்கள் வலைத்தளத்தில் இருந்தன. டேப் அண்ணா, டேப் மதுரம் போன்ற எழுத்துருக்களை நீங்கள் உபயோகித்திருப்பீர்கள். இப்பொழுது யூனிகோடு என்கோடிங் முறை பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. 'லதா' என்கிற எழுத்துரு யூனிகோடு எழுத்துரு ஆகும். இதன் காரணமாக முதலில் டேப் எழுத்துக்களை பிராசஸ் செய்த மொழிக்கருவிகள் யாவையும் யூனிகோடு எழுத்துருக்களை பிராசஸ் செய்ய பிரத்யேக கன்வெர்டர்கள் மூலம் மாற்ற நேர்ந்தது. அனைத்து வலைத்தளங்களும் யூனிகோடு முறையை பின்பற்றினால் இனி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு வசதியாக இருக்கும் என்பது எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.
இப்படி பல எழுத்துரு சிரமங்கள் இருப்பினும் தமிழ் மொழியில் பிற இந்திய மொழிகளை காட்டிலும் அதிக வலைத்தள ஆவணங்கள் இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். தமிழிலில் இருக்கும் விக்கிபீடியா ஆவணங்கள் மட்டுமே ஒரு தமிழ் தேடு பொறியை வடிவமைக்க ஓரளவிற்கு போதுமானது. அவ்வளவு விக்கிபீடியா ஆவணங்கள் தமிழில் உள்ளன. உலகெங்கும் உள்ள தமிழர்களின் தமிழ் ஆர்வமே இதன் முக்கிய காரணம் என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை. தமிழ் கணினி ஆய்வில் உள்ள பிற சிக்கல்களை அடுத்த கட்டுரையில் பாப்போம்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
-சுபலலிதா.
My sister
Monday, May 9, 2011
Operations Trust part2
In previous post I gave a brief outlook about what is OT(Operation Trust). In this post I will explain how they (kgb) work and how they dismantle overseas network of opposition against Russian government .
Initially KGB and Russian government gave permission and allowed MUCR (), to do protest meeting . KGB kept a watch on them. (of course they would do ). MUCR didn’t suspect anything about the movement of KGB. They thought that they were growing. Suddenly one day, KGB arrested most of the members and leaders of the MUCR. Importantly, no one ie others didn’t know that they were arrested. There is no modern network like social media etc that time. KGB tortured the members and makes them as their puppet people. They did by abducting their family members. MUCR members didn’t have choice. Now KBG members moved into the MUCR network. They did even more protest than previously. They spoke more radically against the Russian government. Sometimes they successfully launched attacks also .They started to organize rally and through they got the credibility of overseas supporter also . The overseas networks also started to believe, helped and funded them.
Through KGB agents in MUCR, KGB collected all the data about the network against the Bolshevik party . They arrested all the leaders who were in the network of MUCR in Russia. The success of OT was not about destroyed the network in Russia. But also how they successfully destroyed overseas network of MUCR.
KGB continues their OT in overseas countries. KGB agent went disguise as MUCR in UK and other European countries .they said that they want to overthrew the government and wanted establish the monarchy in Russia .They activities make them believe . They continue the operations what they did in Russia. They collected all the data about who were supporters , who were all financing the MUCR etc . KGb had most of the information about overseas network . They asked important people and gave them trust to come to Russia and take part in the revolution against the government. Important members on the trusted word from MUCR(kgb agents), they came to Russia .in Russia they were captured and tortured. Those they could capture they killed them Every one should know how difficult to make people believe that revolution and their safety about going to Russia. That’s the success of Operation Trust.
It shows how Russian govt carefully planned and executed action against their protestor not in Russia but also in other countries. They did it to safeguard the power of Bolshevik which was only 4 years in power in Russia that time. It was one of the greatest and successful operation carried out by spies in the world.
In Next post I will explain about what is the link between James bond in this operation .
it is translation work of mine from neeraj david article
please do comment
Initially KGB and Russian government gave permission and allowed MUCR (), to do protest meeting . KGB kept a watch on them. (of course they would do ). MUCR didn’t suspect anything about the movement of KGB. They thought that they were growing. Suddenly one day, KGB arrested most of the members and leaders of the MUCR. Importantly, no one ie others didn’t know that they were arrested. There is no modern network like social media etc that time. KGB tortured the members and makes them as their puppet people. They did by abducting their family members. MUCR members didn’t have choice. Now KBG members moved into the MUCR network. They did even more protest than previously. They spoke more radically against the Russian government. Sometimes they successfully launched attacks also .They started to organize rally and through they got the credibility of overseas supporter also . The overseas networks also started to believe, helped and funded them.
Through KGB agents in MUCR, KGB collected all the data about the network against the Bolshevik party . They arrested all the leaders who were in the network of MUCR in Russia. The success of OT was not about destroyed the network in Russia. But also how they successfully destroyed overseas network of MUCR.
KGB continues their OT in overseas countries. KGB agent went disguise as MUCR in UK and other European countries .they said that they want to overthrew the government and wanted establish the monarchy in Russia .They activities make them believe . They continue the operations what they did in Russia. They collected all the data about who were supporters , who were all financing the MUCR etc . KGb had most of the information about overseas network . They asked important people and gave them trust to come to Russia and take part in the revolution against the government. Important members on the trusted word from MUCR(kgb agents), they came to Russia .in Russia they were captured and tortured. Those they could capture they killed them Every one should know how difficult to make people believe that revolution and their safety about going to Russia. That’s the success of Operation Trust.
It shows how Russian govt carefully planned and executed action against their protestor not in Russia but also in other countries. They did it to safeguard the power of Bolshevik which was only 4 years in power in Russia that time. It was one of the greatest and successful operation carried out by spies in the world.
In Next post I will explain about what is the link between James bond in this operation .
it is translation work of mine from neeraj david article
please do comment
operation trust - kgb - james bond 007
If any one doesn’t know about “Operation trust “means then you don’t know much about world intelligence operations . What is operation trust what is connection between operation trust, KGB, JAMES BOND. If you don’t know what is KGB. It is name of Russian intelligence agency. In India it is called RAW (Research and Analysis Wing ) , in Pakistan ISI , in Israel it is called mostaad .
Operation trust is about how KGB previously it was called as OGUP. it was carried out by OGUP. But for our understanding I will say as KGB which is the present name. Operation trust was operation conducted to break down or destroy the network of people living in other countries and opposing Russian revolution and want to bring back the old monarchy. In 1921, nearly after the four years of historic Russian revolution, Monarchist Union of Central Russia (MUCR) was formed to bring down Bolshevik movement and bring back monarchy in Russia. It was supported by russian living in other countries .some countries also funded these people.
In order to break the network of this movement KGB, secretly planned a psychological operation way ie “operation trust”. The operation was planned secretly and with great intricate to overthrew movement and want to capture all the people who were connected to this movement and those they couldn’t capture , they killed them. It was huge success in KGB history. Through that they destroyed most the nodes(people and some groups connected to MUCR) in the network of MUCR and helped to keep Bolshevik in the power. They kept the name that is called “operation Trust “
In next week I will explain about how they did it and what is link btw KGB and James bond
Operation trust is about how KGB previously it was called as OGUP. it was carried out by OGUP. But for our understanding I will say as KGB which is the present name. Operation trust was operation conducted to break down or destroy the network of people living in other countries and opposing Russian revolution and want to bring back the old monarchy. In 1921, nearly after the four years of historic Russian revolution, Monarchist Union of Central Russia (MUCR) was formed to bring down Bolshevik movement and bring back monarchy in Russia. It was supported by russian living in other countries .some countries also funded these people.
In order to break the network of this movement KGB, secretly planned a psychological operation way ie “operation trust”. The operation was planned secretly and with great intricate to overthrew movement and want to capture all the people who were connected to this movement and those they couldn’t capture , they killed them. It was huge success in KGB history. Through that they destroyed most the nodes(people and some groups connected to MUCR) in the network of MUCR and helped to keep Bolshevik in the power. They kept the name that is called “operation Trust “
In next week I will explain about how they did it and what is link btw KGB and James bond
Sunday, May 8, 2011
OPERATION TRUST - KGB - JAMES BOND
ஒப்பரேஷன் ட்ரஸ்ட்" என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும்.
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.
ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust.
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.பி (KGB) அமைப்பு.
சோவியத் ஒன்றியத்தின் ஆணிவேர், சோவியத் ஒன்றியத்தின் கண்கள், சோவியத்தின் மூளை என்கின்றதான பல அடையாளங்களுடன் மிகவும் வெற்றிகரமாக வலம்வந்த உளவு அமைப்பு - கே.ஜீ.பி. உளவு அமைப்பு.
புலம்பெயர்ந்த ஒரு தொகுதி ரஷ்ய பிரஜைகளால் சோவியத்தின் கமியூனிச ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ள ஒரு மிகப் பெரிய புரட்சியை முற்காகவே கிள்ளி எறிவதற்காக கே.ஜீ.பி. உளவு அமைப்பு மேற்கொண்ட ஒரு இரகசிய உளவு நடவடிக்கைதான் Operation Trust.
.
(அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பு OGPU என்ற பெயரில்தான் செயற்பட்டுவந்தது. பின்நாட்களில்தான் கே.ஜீ.பி. என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பின்னாட்களில் பிரபல்யமான கே.ஜீ.பி. என்ற பெயரையே பரிட்சயம் காரணமாக இந்தக் கட்டுரையில் பாவிக்கின்றேன்)
ரஷ்யப் புரட்சி முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ரஷ்யாவில் மன்னராட்சியை உருவாக்கும் நோக்கோடு ஒரு புரட்சிகர அமைப்பு உருவானது. அதன் பெயர் Monarchist Union of Central Russia (MUCR). 1921ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம், ரஷ்யாவில் எப்படியும் மீண்டும் மன்னராட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்தது. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் அப்போதைய போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல்வேறு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மும்முரமான போராட்டத்தை மேற்கொண்டுவந்தது இந்த MUCR அமைப்பு.
இந்த நேரத்தில்தான் கே.ஜீ.பி. ஒரு இரகசிய ஒப்பரேஷனை மேற்கொண்டது.
மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, நிதானமாக, மிகவும் இரகசியமாக காய்களை நகர்த்தியது.
கே.ஜீ.பி. இனது நோக்கமும், திட்டமும் வெறும் MUCR இயக்கத்தை முடக்குவது மாத்திரமல்ல. அதனையும் தாண்டி நீண்ட, விரிந்த திட்டத்தைத் தீட்டியது கே.ஜீ.பி.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போர்க்கொடி துக்கியிருந்த அனைத்து இயக்கங்களையும் கூண்டோடு அழித்துவிடத் திட்டம் தீட்டியது. அது மாத்திரமல்ல. சோவியத்தில் இருந்து வெளியேறி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கிருந்தபடி போராடிவரும் அமைப்புகளுக்கும் சேர்த்து வலை விரித்தது கே.ஜீ.பி..
நுணுக்கமானதும், மிகவும் கஷ்டமானதுமான ஒரு உளவுச் சதி. ஆனாலும் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு பிபல்யமான ஒரு உலகசாதனை படைத்தது கே.ஜீ.பி.
இந்த இரகசிய உளவு நடவடிக்கைக்கு கே.ஜீ.பி. சூட்டிய பெயர் Operation Trust.
முதலில் அந்த புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுதந்தியரமாகச் செயற்படவிட்டார்கள். அழைத்துப் பேசினார்கள். பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்ய, கூட்டம் கூட, கருத்துக்கூறவெல்லாம் அனுமதித்தார்கள். தீடீரென்று ஒருநாள் ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்பாட்டாளர்களையும், தலைமையையும் கைதுசெய்தார்கள்.
ஆனால் இந்த கைது விவகாரம் வெளியே யாருக்குமே தெரியாது.
காதும் காதும் வைத்தாற்போன்று அனைவரையும் பிடித்து உள்ளேபோட்டுவிட்டு, கே.ஜீ.பி.ஏஜன்டுக்கள் MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்தார்கள். கைதுசெய்யப்பட்ட MUCR இயக்கத் தலைமைகளையும் மிட்டி, சித்திரவதை செய்து பணிய வைத்து தங்களது கைப்பாவைகளாக செயற்பட வைத்தார்கள். (மனைவி, பிள்ளைகளை இரகசியச் சிறைகளில் பணயம் வைத்துக்கொண்டு, தாம் சொல்கின்றபடி நடந்தாகவேண்டும் என்று மிரட்டினால் பாவம் அந்த இயக்க உறுப்பினர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?)
MUCR இயக்கத்தினரைப் போன்று வேடமணிந்து செயற்பட்ட ஆரம்பித்த கே.ஜீ.பி. உறுப்பினர்கள், முன்னர் இருந்த MUCR இயக்கத்தைவிட இன்னும் வேகமாக புரட்சி பேசினார்கள். செயற்பட்டார்கள். வெற்றிகரமாகச் சில தாக்குதல்களைக்கூட மேற்கொண்டார்கள். அத்தோடு, சோவியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபடி ரஷ்யாவிலும், வேறு பல நாடுகளிலும் செயற்பட்டு வந்த மற்றைய அமைப்புக்களுக்கு நிதி உதவிகளும், வேறு பல உதவிகளும் செய்யத் தலைப்பட்டார்கள்.
இது, MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்கு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்ட அனைத்து தரப்பினர் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.
விபரங்களைத் திரட்டினார்கள். முக்கியமானவர்களைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்ய முடியாதவர்களை படுகொலை செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் கூட பிழவுகளை ஏற்படுத்தினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த அனைத்து இயக்கங்களையும் முடக்கிவிடுவதில் கே.ஜீ.பி. உளவு அமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த ஒப்பரேஷனைப் பொறுத்தவரையில் கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது, அவர்கள் சோவியத்தில் மாத்திரமல்லாமல் மேற்குலக நாடுகளில் செயற்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களையும், செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதின் ஊடாகத்தான் கிடைத்தது.
ஆம், சோவியத் ஒன்றியத்தில் மாத்திரமல்ல ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து செயற்பட்ட மேற்குல நாடுகளிலும் கூட, கே.ஜீ.பியின் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது.
ரஷ்யாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்த சில கே.ஜீ.பி. ஏஜன்டுக்கள், தம்மை ஆருஊசு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிக்காண்பித்து நடித்துக்கொண்டு சோவியத் அரசிற்கு எதிராக புரட்சி பேசினார்கள். தம்மை தீவிரவாதிகளாக வெளிக்காண்பித்துக்கொண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வதாகப் ‘பவ்லா’ காண்பித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளையும் ஒன்றுதிரட்டி சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைத் தாம் வீழ்த்தப் போவதாக அறைகூவல் விடுத்தார்கள்.
சோவியத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் சோவியத் ஆட்சிக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பெரும் பணக்காரர்கள், ஊடகவியலாளர்கள் இந்த MUCR இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள். பலவிதமான உதவிகள் ஒத்தாசைகளை வழங்கினார்கள். பணத்தை அள்ளி இறைத்தார்கள். ஆருஊசு என்ற அந்தப் புரட்சிகர அமைப்பைப் பயன்படுத்தி எப்படி சோவியத் ஆட்வியைக் கலைக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
ஆனால் MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட சோவியத்தின் உளவுப் பிரிவினரோ மிகவும் கவனமாகச் செயற்பட்டு ஒரு பெரிய உளவுச் சதியை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.
அந்த உளவுச் சதி, உலகின் போரியல் வரலாற்றில் மிகவும் உறுதியாகப் பதியப்படும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை சோவியத்தின் உளவுப் பிரிவான கே.ஜீ.பிக்குப் பெற்றுக்கொடுத்தது.
இப்பொழுது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம்.
எங்கள் அனைவருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற சினிமா காதாபாத்திரத்தை நன்றாகத் தெரியும். இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் ஒரு பிரித்தானிய இரகசிய உளவாளி. மிகப் பெரிய வீர சாகசங்களை தனி ஒருவனாகச் செய்வதில் வல்லவனாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற வீர கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளரின் பெயர் இயான் பிளேமிங் (Ian Fleming). தனது இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் பற்றி இவர் பின்நாட்களில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, 'சிட்னி ரெய்லி (Sidney Reily) என்ற ஒரு பிரித்தானிய உளவாளியின் உண்மையான வீர சாகசம்தான் என்னை ஜேம்ஸ் பொண்ட் 007 கதாபாத்திரத்தை உருவாக்க வைத்தது. இந்த பிரித்தான உளவாளியையும், அவனது சாகசங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த அளவிற்கு பிரபல்யமான இந்த சிட்னி ரெய்லி என்ற பிரித்தானிய உளவாளி உண்மையிலேயே ஒரு ரஷ்யர். ரஷ்யாவில் பிறந்த இவர் ஏதோ காணத்திற்காக ரஷ்ய ஆட்சியை வெறுக்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். பிரித்தானியாவின் இரகசியப் பொலிஸ் பிரிவில் இணைந்து இவர் செய்த சாகசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உளவாளியாக ரஷ்யாவிற்குச் சென்று அங்கிருந்து பலவிதமாக இரகசியங்களைத் திருடி பிரித்தானியாவிற்கு கொண்டு வந்து பல சாதனைகளைப் புரிந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா என்பது உலகைப் பொறுத்தவரையில் ஒரு இரும்புத் திரையின் பின்னால் இருந்த ஒரு தேசம். அங்கு என்ன நடக்கின்றது என்று உலகில் யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ரஷ்யாவிற்குள் பல்வேறு வேஷங்களில் நுழைந்து, அங்கிருந்து இரகசியங்களைத் திருடுவதும், அந்த இரகசியங்களை பிரித்தானியாவுக்குக் கடத்தி வருவதும் இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் அதனைச் சாதித்துக் காட்டினார் சிட்னி ரெய்லி.
அது மாத்திரமல்ல அப்பொழுது இருந்த லெனினின் ஆட்சியைக் கலைத்துவிட்டு சிட்னி ரெய்லியை அதிபராக்கும் இரகசியச் சதித்திட்டமும் பிரித்தானியாவிடம் இருந்தது. அந்த நோக்கத்திலும் பல காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தன ரஷ்யாவில்.
சோவியத்தின் இராணுவத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில்; சிட்னி ரெய்லி என்ற இந்த மோசமான உளவாளி பற்றி தெரியவந்த பொழுது, ரஷ்யாவில் தங்கியிருந்த அவர் மிகவும் சாதூர்யமாகத் தப்பி பிரித்தானியா வந்து சேர்ந்தார். மிகவும் பாதுகாப்பாக அங்கு அமர்ந்தும் கொண்டார். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்தபடியே ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிவேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.
இந்த சிட்னி ரெய்லியை கைதுசெய்ததுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
எப்படிக் கைதுசெய்தார்கள்?
கைது செய்யவில்லை, ஒரு வகையில் சதி செய்து கடத்திச் சென்றார்கள் என்று கூறலாம்.
லெனினின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று சதா சிந்தித்துக்கொண்டிருந்த சிட்னி ரெய்லிக்கு, ஆருஊசு என்ற புரட்சிகர அமைப்பின் ஐரோப்பிய வருகை பற்றிய செய்தி இனிப்பாகக் கிடைத்தது. அந்த அமைப்பைத் தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மிகவும் சந்தோஷம் என்று அவரை கைகுலுக்கி வரவேற்றது ஆருஊசு இனது ஐரோப்பியப் பிரிவு.
MUCR என்ற பெயரில் ரஷ்யாவின் கே.ஜீ.பி. உறுப்பினர்கள்தான் அங்கு வந்திருக்கின்றார்கள் என்று சிட்னி ரெய்லிக்குத் தெரியாது. தானாகவே சென்று வலையில் வீழ்ந்தார். லெனினின் ஆட்சியை எப்படி வீழ்த்தலாம் என்று அவர்களுடன் சேர்ந்து நுணுக்கமாகத் திட்டம் தீட்டினார்.
ஆனால், இங்கே லண்டனில் அமர்ந்துகொண்டு லெனினை வீழ்த்துவது எப்படி? ரஷ்யாவில் ஆட்சிதான் அமைப்பது எப்படி? அதற்கு ரஷ்யாவிற்கு நேரில் போகவேண்டும் அல்லவா?
'ரஷ்யாவில் மிகவும் பலமாகச் செயற்படும் எங்களது உறுப்பினர்களூடாக உங்கள் இரகசியப் பயணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம்" என்றது MUCR இனது ஐரோப்பியப் பிரிவு. 'நீங்களே நேரடியாகச் சென்று ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றி விளக்கிச்சொன்னால் அங்குள்ள எங்கள் உறுப்பினர்களுக்குத் தெம்பாக இருக்கும்.. மேலும் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.." சிட்னி ரெய்லிக்கு ஐடியா கொடுத்தார்கள் MUCR இனது ஐரோப்பியப் பிரிவு.
ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு என்று மிகவும் இரகசியமாகப் புறப்பட்ட சிட்னி ரெய்லி, ரஷ்யாவில் பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்யாவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்ற கே.ஜீ.பி. உறுப்பினர்களே, ரஷ்ய எல்லையை அடைந்ததும் அவரைக் கைதுசெய்தார்கள். சித்திரவதைகள், விசாரணை, துப்பாக்கிச் சூடு என்று மிகவும் சோகமாக முடிவடைந்தது பிரபல்யமான, திறமையான ஒரு வீரனின் வாழ்க்கை.
அது மாத்திரமல்ல, இவர் போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் ரஷ்ய ஆட்சிக்கு எதிராகச் செயட்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்கள், தேசப்பற்றாளர்கள், தேசியவாதிகள் ஏமாற்றப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போணார்கள், கடத்தப்பட்டார்கள். செயலிழக்க வைக்கப்பட்டார்கள்.
இதுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.
உலக அளவில் மிகவும் வெற்கரமான ஒரு உளவு நடவடிக்கை.
nandri
neraj david
ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.
ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust.
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.பி (KGB) அமைப்பு.
சோவியத் ஒன்றியத்தின் ஆணிவேர், சோவியத் ஒன்றியத்தின் கண்கள், சோவியத்தின் மூளை என்கின்றதான பல அடையாளங்களுடன் மிகவும் வெற்றிகரமாக வலம்வந்த உளவு அமைப்பு - கே.ஜீ.பி. உளவு அமைப்பு.
புலம்பெயர்ந்த ஒரு தொகுதி ரஷ்ய பிரஜைகளால் சோவியத்தின் கமியூனிச ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ள ஒரு மிகப் பெரிய புரட்சியை முற்காகவே கிள்ளி எறிவதற்காக கே.ஜீ.பி. உளவு அமைப்பு மேற்கொண்ட ஒரு இரகசிய உளவு நடவடிக்கைதான் Operation Trust.
.
(அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பு OGPU என்ற பெயரில்தான் செயற்பட்டுவந்தது. பின்நாட்களில்தான் கே.ஜீ.பி. என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பின்னாட்களில் பிரபல்யமான கே.ஜீ.பி. என்ற பெயரையே பரிட்சயம் காரணமாக இந்தக் கட்டுரையில் பாவிக்கின்றேன்)
ரஷ்யப் புரட்சி முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ரஷ்யாவில் மன்னராட்சியை உருவாக்கும் நோக்கோடு ஒரு புரட்சிகர அமைப்பு உருவானது. அதன் பெயர் Monarchist Union of Central Russia (MUCR). 1921ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கம், ரஷ்யாவில் எப்படியும் மீண்டும் மன்னராட்சியை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்தது. சோவியத் ஒன்றியம் முழுவதிலும் அப்போதைய போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல்வேறு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மும்முரமான போராட்டத்தை மேற்கொண்டுவந்தது இந்த MUCR அமைப்பு.
இந்த நேரத்தில்தான் கே.ஜீ.பி. ஒரு இரகசிய ஒப்பரேஷனை மேற்கொண்டது.
மிகவும் கவனமாகத் திட்டமிட்டு, நிதானமாக, மிகவும் இரகசியமாக காய்களை நகர்த்தியது.
கே.ஜீ.பி. இனது நோக்கமும், திட்டமும் வெறும் MUCR இயக்கத்தை முடக்குவது மாத்திரமல்ல. அதனையும் தாண்டி நீண்ட, விரிந்த திட்டத்தைத் தீட்டியது கே.ஜீ.பி.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போர்க்கொடி துக்கியிருந்த அனைத்து இயக்கங்களையும் கூண்டோடு அழித்துவிடத் திட்டம் தீட்டியது. அது மாத்திரமல்ல. சோவியத்தில் இருந்து வெளியேறி மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கிருந்தபடி போராடிவரும் அமைப்புகளுக்கும் சேர்த்து வலை விரித்தது கே.ஜீ.பி..
நுணுக்கமானதும், மிகவும் கஷ்டமானதுமான ஒரு உளவுச் சதி. ஆனாலும் அதனை வெற்றிகரமாக மேற்கொண்டு பிபல்யமான ஒரு உலகசாதனை படைத்தது கே.ஜீ.பி.
இந்த இரகசிய உளவு நடவடிக்கைக்கு கே.ஜீ.பி. சூட்டிய பெயர் Operation Trust.
முதலில் அந்த புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சுதந்தியரமாகச் செயற்படவிட்டார்கள். அழைத்துப் பேசினார்கள். பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்ய, கூட்டம் கூட, கருத்துக்கூறவெல்லாம் அனுமதித்தார்கள். தீடீரென்று ஒருநாள் ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்பாட்டாளர்களையும், தலைமையையும் கைதுசெய்தார்கள்.
ஆனால் இந்த கைது விவகாரம் வெளியே யாருக்குமே தெரியாது.
காதும் காதும் வைத்தாற்போன்று அனைவரையும் பிடித்து உள்ளேபோட்டுவிட்டு, கே.ஜீ.பி.ஏஜன்டுக்கள் MUCR இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போன்று செயற்பட ஆரம்பித்தார்கள். கைதுசெய்யப்பட்ட MUCR இயக்கத் தலைமைகளையும் மிட்டி, சித்திரவதை செய்து பணிய வைத்து தங்களது கைப்பாவைகளாக செயற்பட வைத்தார்கள். (மனைவி, பிள்ளைகளை இரகசியச் சிறைகளில் பணயம் வைத்துக்கொண்டு, தாம் சொல்கின்றபடி நடந்தாகவேண்டும் என்று மிரட்டினால் பாவம் அந்த இயக்க உறுப்பினர்களால் வேறு என்னதான் செய்யமுடியும்?)
MUCR இயக்கத்தினரைப் போன்று வேடமணிந்து செயற்பட்ட ஆரம்பித்த கே.ஜீ.பி. உறுப்பினர்கள், முன்னர் இருந்த MUCR இயக்கத்தைவிட இன்னும் வேகமாக புரட்சி பேசினார்கள். செயற்பட்டார்கள். வெற்றிகரமாகச் சில தாக்குதல்களைக்கூட மேற்கொண்டார்கள். அத்தோடு, சோவியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபடி ரஷ்யாவிலும், வேறு பல நாடுகளிலும் செயற்பட்டு வந்த மற்றைய அமைப்புக்களுக்கு நிதி உதவிகளும், வேறு பல உதவிகளும் செய்யத் தலைப்பட்டார்கள்.
இது, MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்கு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்ட அனைத்து தரப்பினர் பற்றிய முழு விபரங்களையும் திரட்டுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.
விபரங்களைத் திரட்டினார்கள். முக்கியமானவர்களைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்ய முடியாதவர்களை படுகொலை செய்தார்கள். பல்வேறு இயக்கங்கள் மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் கூட பிழவுகளை ஏற்படுத்தினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த அனைத்து இயக்கங்களையும் முடக்கிவிடுவதில் கே.ஜீ.பி. உளவு அமைப்பு வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த ஒப்பரேஷனைப் பொறுத்தவரையில் கே.ஜீ.பி. உளவு அமைப்பிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது, அவர்கள் சோவியத்தில் மாத்திரமல்லாமல் மேற்குலக நாடுகளில் செயற்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களையும், செயற்பாட்டாளர்களையும் ஒடுக்குவதின் ஊடாகத்தான் கிடைத்தது.
ஆம், சோவியத் ஒன்றியத்தில் மாத்திரமல்ல ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து செயற்பட்ட மேற்குல நாடுகளிலும் கூட, கே.ஜீ.பியின் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது.
ரஷ்யாவில் இருந்து பிரித்தானியாவிற்கு வந்து தஞ்சம் அடைந்த சில கே.ஜீ.பி. ஏஜன்டுக்கள், தம்மை ஆருஊசு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிக்காண்பித்து நடித்துக்கொண்டு சோவியத் அரசிற்கு எதிராக புரட்சி பேசினார்கள். தம்மை தீவிரவாதிகளாக வெளிக்காண்பித்துக்கொண்டு சோவியத் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வதாகப் ‘பவ்லா’ காண்பித்தார்கள். புலம்பெயர் நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் போல்ஷ்விக் ஆட்சிக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பல்வேறு சக்திகளையும் ஒன்றுதிரட்டி சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியைத் தாம் வீழ்த்தப் போவதாக அறைகூவல் விடுத்தார்கள்.
சோவியத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளிலும் சோவியத் ஆட்சிக்கு எதிராகக் கொதித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பெரும் பணக்காரர்கள், ஊடகவியலாளர்கள் இந்த MUCR இயக்கத்தின் வெளிநாட்டுப் பிரிவுடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள். பலவிதமான உதவிகள் ஒத்தாசைகளை வழங்கினார்கள். பணத்தை அள்ளி இறைத்தார்கள். ஆருஊசு என்ற அந்தப் புரட்சிகர அமைப்பைப் பயன்படுத்தி எப்படி சோவியத் ஆட்வியைக் கலைக்கலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
ஆனால் MUCR இயக்கம் என்ற பெயரில் செயற்பட்ட சோவியத்தின் உளவுப் பிரிவினரோ மிகவும் கவனமாகச் செயற்பட்டு ஒரு பெரிய உளவுச் சதியை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.
அந்த உளவுச் சதி, உலகின் போரியல் வரலாற்றில் மிகவும் உறுதியாகப் பதியப்படும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியை சோவியத்தின் உளவுப் பிரிவான கே.ஜீ.பிக்குப் பெற்றுக்கொடுத்தது.
இப்பொழுது ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம்.
எங்கள் அனைவருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற சினிமா காதாபாத்திரத்தை நன்றாகத் தெரியும். இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் ஒரு பிரித்தானிய இரகசிய உளவாளி. மிகப் பெரிய வீர சாகசங்களை தனி ஒருவனாகச் செய்வதில் வல்லவனாக இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் பொண்ட் 007 என்ற வீர கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளரின் பெயர் இயான் பிளேமிங் (Ian Fleming). தனது இந்த ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரம் பற்றி இவர் பின்நாட்களில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது, 'சிட்னி ரெய்லி (Sidney Reily) என்ற ஒரு பிரித்தானிய உளவாளியின் உண்மையான வீர சாகசம்தான் என்னை ஜேம்ஸ் பொண்ட் 007 கதாபாத்திரத்தை உருவாக்க வைத்தது. இந்த பிரித்தான உளவாளியையும், அவனது சாகசங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் நான் ஜேம்ஸ் பொண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்" என்று தெரிவித்திருந்தார்.
அந்த அளவிற்கு பிரபல்யமான இந்த சிட்னி ரெய்லி என்ற பிரித்தானிய உளவாளி உண்மையிலேயே ஒரு ரஷ்யர். ரஷ்யாவில் பிறந்த இவர் ஏதோ காணத்திற்காக ரஷ்ய ஆட்சியை வெறுக்கத் தொடங்கினார். சிறு வயதிலேயே தனது குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். பிரித்தானியாவின் இரகசியப் பொலிஸ் பிரிவில் இணைந்து இவர் செய்த சாகசங்கள் கொஞ்சநஞ்சமல்ல. உளவாளியாக ரஷ்யாவிற்குச் சென்று அங்கிருந்து பலவிதமாக இரகசியங்களைத் திருடி பிரித்தானியாவிற்கு கொண்டு வந்து பல சாதனைகளைப் புரிந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ரஷ்யா என்பது உலகைப் பொறுத்தவரையில் ஒரு இரும்புத் திரையின் பின்னால் இருந்த ஒரு தேசம். அங்கு என்ன நடக்கின்றது என்று உலகில் யாருக்குமே தெரியாது. அப்படிப்பட்ட ரஷ்யாவிற்குள் பல்வேறு வேஷங்களில் நுழைந்து, அங்கிருந்து இரகசியங்களைத் திருடுவதும், அந்த இரகசியங்களை பிரித்தானியாவுக்குக் கடத்தி வருவதும் இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் அதனைச் சாதித்துக் காட்டினார் சிட்னி ரெய்லி.
அது மாத்திரமல்ல அப்பொழுது இருந்த லெனினின் ஆட்சியைக் கலைத்துவிட்டு சிட்னி ரெய்லியை அதிபராக்கும் இரகசியச் சதித்திட்டமும் பிரித்தானியாவிடம் இருந்தது. அந்த நோக்கத்திலும் பல காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தன ரஷ்யாவில்.
சோவியத்தின் இராணுவத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தில்; சிட்னி ரெய்லி என்ற இந்த மோசமான உளவாளி பற்றி தெரியவந்த பொழுது, ரஷ்யாவில் தங்கியிருந்த அவர் மிகவும் சாதூர்யமாகத் தப்பி பிரித்தானியா வந்து சேர்ந்தார். மிகவும் பாதுகாப்பாக அங்கு அமர்ந்தும் கொண்டார். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்தபடியே ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்க்கும் சதிவேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.
இந்த சிட்னி ரெய்லியை கைதுசெய்ததுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கையின் மிகப் பெரிய வெற்றி என்று வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
எப்படிக் கைதுசெய்தார்கள்?
கைது செய்யவில்லை, ஒரு வகையில் சதி செய்து கடத்திச் சென்றார்கள் என்று கூறலாம்.
லெனினின் ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்று சதா சிந்தித்துக்கொண்டிருந்த சிட்னி ரெய்லிக்கு, ஆருஊசு என்ற புரட்சிகர அமைப்பின் ஐரோப்பிய வருகை பற்றிய செய்தி இனிப்பாகக் கிடைத்தது. அந்த அமைப்பைத் தொடர்புகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மிகவும் சந்தோஷம் என்று அவரை கைகுலுக்கி வரவேற்றது ஆருஊசு இனது ஐரோப்பியப் பிரிவு.
MUCR என்ற பெயரில் ரஷ்யாவின் கே.ஜீ.பி. உறுப்பினர்கள்தான் அங்கு வந்திருக்கின்றார்கள் என்று சிட்னி ரெய்லிக்குத் தெரியாது. தானாகவே சென்று வலையில் வீழ்ந்தார். லெனினின் ஆட்சியை எப்படி வீழ்த்தலாம் என்று அவர்களுடன் சேர்ந்து நுணுக்கமாகத் திட்டம் தீட்டினார்.
ஆனால், இங்கே லண்டனில் அமர்ந்துகொண்டு லெனினை வீழ்த்துவது எப்படி? ரஷ்யாவில் ஆட்சிதான் அமைப்பது எப்படி? அதற்கு ரஷ்யாவிற்கு நேரில் போகவேண்டும் அல்லவா?
'ரஷ்யாவில் மிகவும் பலமாகச் செயற்படும் எங்களது உறுப்பினர்களூடாக உங்கள் இரகசியப் பயணத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தருகின்றோம்" என்றது MUCR இனது ஐரோப்பியப் பிரிவு. 'நீங்களே நேரடியாகச் சென்று ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றி விளக்கிச்சொன்னால் அங்குள்ள எங்கள் உறுப்பினர்களுக்குத் தெம்பாக இருக்கும்.. மேலும் உற்சாகமாகச் செயற்படுவார்கள்.." சிட்னி ரெய்லிக்கு ஐடியா கொடுத்தார்கள் MUCR இனது ஐரோப்பியப் பிரிவு.
ரஷ்யாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு என்று மிகவும் இரகசியமாகப் புறப்பட்ட சிட்னி ரெய்லி, ரஷ்யாவில் பகிரங்கமாகக் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்யாவிற்கு இரகசியமாக அழைத்துச் சென்ற கே.ஜீ.பி. உறுப்பினர்களே, ரஷ்ய எல்லையை அடைந்ததும் அவரைக் கைதுசெய்தார்கள். சித்திரவதைகள், விசாரணை, துப்பாக்கிச் சூடு என்று மிகவும் சோகமாக முடிவடைந்தது பிரபல்யமான, திறமையான ஒரு வீரனின் வாழ்க்கை.
அது மாத்திரமல்ல, இவர் போன்று புலம்பெயர்ந்த நாடுகளில் ரஷ்ய ஆட்சிக்கு எதிராகச் செயட்பட்டுக் கொண்டிருந்த பல புரட்சியாளர்கள், தேசப்பற்றாளர்கள், தேசியவாதிகள் ஏமாற்றப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். காணாமல் போணார்கள், கடத்தப்பட்டார்கள். செயலிழக்க வைக்கப்பட்டார்கள்.
இதுதான் Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை.
உலக அளவில் மிகவும் வெற்கரமான ஒரு உளவு நடவடிக்கை.
nandri
neraj david
Subscribe to:
Posts (Atom)